×

சென்னையில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்த 2ம் வகுப்பு மாணவனின் உடலுக்கு பெற்றோர்கள் கண்ணீர் மல்க இறுதிச் சடங்கு.

சென்னை : சென்னை ஆழ்வார்திருநகரில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்த 2ஆம் வகுப்பு மாணவனின் இறுதிச் சடங்கு பெற்றோரின் கண்ணீர் மல்க நடைபெற்றது.சென்னை விருகம்பாக்கம் இளங்கோவன் நகர் காளியம்மன் கோயில் தெரு சேர்ந்த வெற்றிவேல், ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி ஜெனிபரும், ஐடி ஊழியர். இவர்களின் மகன் தீக்‌ஷித் (7), ஆழ்வார்திருநகரில் உள்ள பிரபல வெங்கடேஸ்வரா மெட்ரி குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், தீக்‌ஷித், வழக்கம் போல் நேற்று காலை 8.40 மணிக்கு வீட்டில் இருந்து பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றான். வேனை முகலிவாக்ககம் காந்தி தெருவை சேர்ந்த பூங்காவனம்(63) என்பவர் ஓட்டினார்.

வேன் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததும், வேனில் இருந்து தீக்‌ஷித் உள்ளிட்ட மாணவர்கள் இறங்கி தங்கள் வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். அப்போது வேனில் இருந்து இறங்கிய தீக்‌ஷித், லஞ்ச் பாக்சை எடுக்கவில்லை. இதனால், லஞ்ச் பாக்சை எடுக்க மீண்டும் வேனுக்குள் வந்தார். இதை வேன் டிரைவர் பூங்காவனம் கவனிக்கவில்லை. எனவே, மாணவர்கள் அனைவரும் சென்றுவிட்டதாக கருதி வேனை பார்க்கிங் செய்ய ரிவர்சில் எடுத்துள்ளார். இதற்கிடையில்தான், தீக்‌ஷித் தன் லஞ்ச் பாக்சை எடுத்துக்கொண்டு வேன் பின்புறமாக நடந்து தன் வகுப்பு நோக்கி சென்று கொண்டிருந்தான். ரிவர்சில் எடுத்த வேன், தீக்‌ஷித் மீது படுபயங்கரமாக மோதியது. இதில் நிலைகுலைந்து கீழேவிழுந்த நிலையில் வேன் சக்கரம் மாணவன் மீது ஏறி இறங்கியது. இதில் மாணவன் உயிரிழந்தான். அவனது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், வளசரவாக்கத்திலுள்ள தேவாலயத்திற்கு தீக்சித்தின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. பின்னர், ஆழ்வார்திருநகர் பிருந்தாவனம் கல்லறையில் மாணவன் தீக்சித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, மாணவனின் பெற்றோரும், உறவினர்களும் துக்கம் தாளாமல் கதறி அழுதனர்.

Tags : van Mothi ,Chennai , School, campus, van, parents, funeral
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...